Sunday 5th of May 2024 03:38:03 AM GMT

LANGUAGE - TAMIL
.
முடிவுக்கு வருகிறது ஐதேக தேசியப்பட்டியல் விவகாரம்: ரணில் விக்கிரமசிங்க தெரிவு!

முடிவுக்கு வருகிறது ஐதேக தேசியப்பட்டியல் விவகாரம்: ரணில் விக்கிரமசிங்க தெரிவு!


ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் கிடைத்திருந்த ஒரே ஒரு தேசியப்பட்டியல் ஆசனத்தின் ஊடாக யார் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவாவது என்பது தொடர்பான இழுபறி முடிவுக்கு வந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்று இலங்கையின் 9வது பாராளுமன்றம் தெரிவு செய்யப்பட்டு நான்கு மாதங்கள் நிறைவடையும் நிலையில் இலங்கையின் பிரதான தேசியக் கட்சிகளில் ஒன்றாக விளங்கிய ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் ஒருவர்கூட பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்காத நிலை தொடர்ந்து வருகிறது.

ஐக்கிய தேசியக் கட்சிக்கு கிடைத்த ஒரே ஒரு தேசியப் பட்டியல் ஊடான பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்திற்கு யாரை தெரிவு செய்வது என்று முடிவு எடுக்கப்படாது இழுபறி நீடித்துவந்த நிலையில் தற்போது முடிவுக்கு வந்துள்ளதாக தெரியவருகிறது.

ஐக்கிய தேசியக் கட்சியின் மறுசீரமைப்பு தொடர்பில் கண்டியில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுதிப்பினராக ரணில் விக்கிரமிசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

.ன்று இதுகுறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Category: செய்திகள், புதிது
Tags: ரணில் விக்கிரமசிங்க, இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE